திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 20 மினி பஸ்கள் இயக்கம்…! * அமைச்சர் கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார்..!
குறைந்த மக்கள் தொகை கொண்ட கிராமங்கள் மற்றும் குறுகிய சாலை கொண்ட பகுதிகளுக்கு மினி பஸ் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 20 மினி பஸ் சேவையை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு இன்று (ஜூன் 19) கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ப.சுரேஷ்பாபு, த.நடராஜன், போக்குவரத்து வாகன ஆய்வாளர்கள் ச.செந்தில்குமார், சு.செந்தில், பா.அருண்குமார், அ.முகமது மீரான் மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமிழக அரசின் புதிய விரிவான சிற்றுந்து திட்டத்தின் கீழ் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து முத்தரசநல்லூர், சமயபுரம், பழூர், கம்பரசம்பேட்டை, புள்ளம்பாடி, துறையூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
Comments are closed.