துறையூர் அருகே விபத்து: லாரியின் டயர் வெடித்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் போலீஸ் ஏட்டு உயிரிழப்பு…!
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தவர் சரவணபெருமாள். இவர், காவல் நிலையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் துறையூரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வெங்கடாசலபுரம் கடைவீதி பகுதியில் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் டயர் திடீரென வெடித்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில்,
கீழே விழுந்த ஏட்டு சரவணபெருமாள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் விரைந்து சென்று இறந்த சரவணப்பெருமாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சரவணபெருமாளுக்கு மோகனப்பிரியா என்கிற மனைவி மற்றும் சூர்யா, கௌதம் ஆகிய இருமகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.