Rock Fort Times
Online News

“பொதுமக்கள் யாரும் என்னை முற்றுகையிடவில்லை” – * முசிறி திமுக எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் விளக்கம்

திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதியில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவில் முசிறி திமுக சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் பங்கேற்றார். அப்போது சட்டமன்ற உறுப்பினரை கிராம மக்கள் முற்றுகையிட்டு தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்டு வந்தீங்க… இப்பதான் தொகுதி பக்கம் வர்றீங்க… ரோடு வசதி – லைட் வசதி – குடிநீர் வசதி இல்ல.. எதுக்கு இப்ப வந்தீங்க?
என சரமாரியாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், முசிறி அருகே மேல வெள்ளூர் கிராமத்திற்கு கிராமத் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். ஊடகங்களில் வந்ததுபோல் மக்கள் என்னை முற்றுகையிடவில்லை. அது தவறான தகவல். அப்பகுதி மக்கள் தங்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதி கோரி என்னிடம் முறையிட்டனர். இதனை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அப்பகுதி மக்களுக்கு சாலை வசதி, பாலம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்துள்ளேன். மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் போல் நான் இல்லை. எங்கு வேண்டுமானாலும் சென்று விசாரித்துக் கொள்ளுங்கள். மக்களின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து விடுகிறேன். என் மீது தவறான குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இதை நேரில் பார்க்க விரும்பினால் என் சொந்த செலவில் நான் வேன் ஏற்பாடு செய்து அழைத்துச் செல்கிறேன் என்று கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்