திருச்சி, பச்சமலை மாணவர் சட்ட நுழைவுத் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை..!- சாதிக்க தூண்டியது “ஜெய்பீம்” எனப் பேட்டி…
திருச்சி மாவட்டம் பச்சைமலை அருகேயுள்ள தோனூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் பரத். இவர் கிளாட் ( CLAT ) எனப்படும் பொது சட்ட நுழைவு தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அதன்படி, திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிக்க இருக்கிறார். இவர் ஜெய் பீம் படம் பார்த்து சட்டப்படிப்பு படிக்க விருப்பப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சட்டப் படிப்பு படிக்கும் முதல் பழங்குடியின மாணவன் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். முன்னதாக கல்வராயன் மலைப்பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் சென்னை ஐஐடி மெட்ராஸில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments are closed.