Rock Fort Times
Online News

தமிழக காவல்துறையில் 29 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய டி.எஸ்.பி. ஏ.காமராஜுக்கு பணி நிறைவு பாராட்டு விழா…! * காவல்துறை அதிகாரிகள், தொழிலதிபர்கள் நேரில் வாழ்த்து !

பெரம்பலூர் மாவட்ட குற்றப்பிரிவில் டி.எஸ்.பியாக பணிபுரிந்து வந்தவர் ஏ.காமராஜ். 1996ம் ஆண்டு பேட்சை சேர்ந்த இவர் தமிழ்நாடு காவல்துறையில் கடந்த 29 ஆண்டுகள் கண்ணியமாகவும், சிறப்பாகவும் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றுள்ளார். அவரது பணி நிறைவு பாராட்டு விழா நேற்று (05-06-2025) வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் திருச்சி – சென்னை பைபாஸ் சாலை, பழைய பால்பண்ணை அருகில் உள்ள ஹோட்டல் பத்மாவதி, ப்ருத்வி ஹால் குளிர்சாதன அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு வந்த அனைவரையும் டிஎஸ்பி-ன் மூத்த மகள் வழக்கறிஞர் கே.சந்தியா வரவேற்றார். விழாவில், திருச்சி மாநகர வடக்கு துணை போலீஸ் கமிஷனர் சிபின், பெரம்பலூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மதியழகன், பாலமுருகன், உதவி கமிஷனர்கள் ஸ்ரீதர், கென்னடி, சதீஷ்குமார், பழனிசாமி மற்றும் காவல் ஆய்வாளர்கள், திருச்சி ராக்போர்ட் டைம்ஸ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர். லெஷ்மி நாராயணன், தொழில் அதிபர்கள் செல்வகுமார், ராக்கப்பன், இன்ஜினியர்கள் ரமேஷ், ராஜேஷ் மற்றும் தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் பங்கேற்று வாழ்த்தி பேசினர். முடிவில் டிஎஸ்பி-ன் மற்றொரு மகள் வழக்கறிஞர் கே.இலக்கியா அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஓய்வு பெற்ற டிஎஸ்பி காமராஜ், அவரது மனைவி கே.ஆர்.ரமணி மற்றும் அவர்களது உறவினர்கள் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்