திருச்சி நகரியம் கோட்டத்திற்குட்பட்ட 11 கி.வோ. உயரழுத்த மின்பாதைகளில் நாளை(05-06-2025) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உய்யக்கொண்டான் திருமலை உயரழுத்த மின்பாதை வாயிலாக மின் வினியோகம் பெறும் அம்மையப்ப நகர், லாவண்யா கார்டன், சாந்தஷீலா நகர், ஆதி நகர், எம்.எம்.நகர், வேலாயுதம் கார்டன், கொடாப்பு, உய்யகொண்டான் திருமலை, கணபதி நகர், சண்முகா நகர், சண்முகா நகர் கிழக்கு விஸ்தரிப்பு, ரெங்கா நகர் 1-வது கிராஸ் முதல் 4-வது கிராஸ் வரை, ராம் நகர், செல்வா நகர், அழகர் நகர், வாசன் நகர், இந்திராகாந்தி நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இதேபோல, 11 கி.வோ. திருப்பராய்த்துறை உயரழுத்த மின்பாதை வாயிலாக மின் வினியோகம் பெறும், கம்பரசம்பேட்டை, பள்ளி வாசல், வெள்ளாளர் தெரு, விசாலாட்சி அவென்யூ, கணபதி நகர், தமிழன் நகர், கூடலூர், முருங்கபேட்டை, முத்தரசநல்லூர், பழூர், அல்லூர், மேக்குடி, ஜீயபுரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. 11 கி.வோ. தஞ்சை ரோடு உயரழுத்த மின்பாதை வாயிலாக மின் வினியோகம் பெறும் தஞ்சை ரோடு, மகாலெட்சுமி நகர், தனரெத்தினம் நகர், பழைய பால்பண்ணை, காயிதே மில்லத் நகர், கோல்டன் நகர், பிச்சை நகர், அகிலாண்டேஸ்வரி நகர், வாஸ் நகர், மணல்வாரி துறைரோடு, வள்ளுவர் நகர், பாரதிநகர், துரைசாமி புரம், தனமணி காலனி, மறைமலையடிகள் தெரு, இளங்கோ தெரு, திரு.வி.க. தெரு, வரதராஜன் தெரு, இருதய ஆண்டவர் தெரு, அண்ணாதெரு, ஆசா தெரு ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஏ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.
Comments are closed.