Rock Fort Times
Online News

விலங்குகளையும் விட்டு வைக்காத மனிதர்கள்- திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட உடும்புகள்…!

இந்தியாவில் தங்கத்தின் மீதான தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. அவ்வாறு தங்கத்தை கடத்தி வருபவர்கள் திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையில் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். விமானத்தில் தங்கம் தான் கடத்தி வரப்படுகிறது என்றால் தற்போது விலங்குகளையும் கடத்திக் கொண்டு வருகிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து நட்சத்திர ஆமைகள், நண்டுகள், பாம்புகள் போன்றவை கடத்திவர படுகின்றன. அவற்றையும் விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்து மீட்டு வருகின்றனர். அந்தவகையில் மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து விமானத்தில் திருச்சி வந்தடைந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு பயணி கொண்டு வந்த உடைமையில் இரண்டு உடும்புகள் இருந்தது. அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த உடும்புகள் எதற்காக விமானத்தில் கடத்தி வரப்பட்டது, யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது குறித்து அந்தப் பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உடும்புகள் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்