Rock Fort Times
Online News

திருச்சி, புத்தூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிவாஜி சிலையை நாளை (மே 8) திறக்கிறார், முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைவுக்குப் பிறகு திருச்சி, பாலக்கரை ரவுண்டானா பகுதியில் அவருக்கு முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. ஆனால், பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த சிலையை கடந்த 14 ஆண்டுகளாக திறக்க முடியவில்லை. நீண்ட காலமாக மூடப்பட்டு கிடக்கும் அந்த சிலையை திறக்க அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பெரும் முயற்சி எடுத்தனர். இதன் காரணமாக பாலக்கரை ரவுண்டானா பகுதியில் உள்ள சிலை அகற்றப்பட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சோனா, மீனா தியேட்டர் எதிரே நிறுவ முடிவு செய்யப்பட்டது. அங்கும் சிக்கல் ஏற்பட்டதால் திருச்சி புத்தூர் பகுதியில் நிறுவ முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த சிலையை திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய திறப்பு விழாவிற்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து
திருச்சி, புத்தூர் பெரியார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை( மே 8) மாலை 5 மணி அளவில் திறந்து வைக்கிறார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்