Rock Fort Times
Online News

முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 8, 9 தேதிகளில் திருச்சி வருகை: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை…!

திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 8) மற்றும் நாளை மறுநாள் (மே 9) ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி வருகை தருகிறார். இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் திறப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மதியம் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். அவருக்கு நமது மாவட்ட கழகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்திட வேண்டுகிறேன். அதனைத் தொடர்ந்து திருவெறும்பூர் துவாக்குடியில் மதியம் 1 மணி அளவில் நடைபெறும் மாதிரி பள்ளி திறப்பு விழா நிகழ்விலும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் அணிகளின் அனைத்து நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழக தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்