திருச்சி, துவாக்குடியில் டாஸ்மாக் காலி பாட்டில்களில் போலி மதுவை நிரப்பி விற்க கொண்டு சென்றவர் கைது…!
திருச்சி, துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், கீழமாங்காவனம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அவரைப் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் தஞ்சை மாவட்டம், பூதலூர் வெண்டையம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த வெங்கடாசலம் (50 )என்பதும், டாஸ்மாக் காலி பாட்டில்களில் போலி மதுவை நிரப்பி விற்க கொண்டு சென்றதும் தெரிய வந்தது. வெங்கடாசலம் வைத்திருந்த சாக்கு மூட்டையை பிரித்துப் பார்த்தபோது அதில் 80 போலி மது பாட்டில்கள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், வெங்கடாசலத்தை கைது செய்தார். பின்னர் அவரை திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
Comments are closed.