Rock Fort Times
Online News

குடிநீரில் சாக்கடை நீர் கலந்த விவகாரம்:- அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்…!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட உறையூர் பகுதி, மண்டலம் -5 10-வது வார்டில் உள்ள மின்னப்பன் தெரு, பணிக்கன் தெரு, நெசவாளர் காலனி, காமாட்சியம்மன் தெரு, காளையன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்ததாகவும், அதனை குடித்த பலருக்கு வாந்தி- பேதி ஏற்பட்டதாகவும், நான்கு பேர் உயிரிழந்து உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதில், பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் சிலர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், வளர்மதி மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்த துடன் அவர்களுக்கு உதவிப் பொருட்களை வழங்கினர். அப்போது பகுதி கழக செயலாளர்கள் என்.எஸ்.பூபதி (எ) பூபேந்திரன், புத்தூர் ராஜேந்திரன், இளைஞர் அணி ரஜினிகாந்த், ஐ.டி. பிரிவு வெங்கட் பிரபு மற்றும் கருமண்டபம் சுரேந்தர், சில்வர் சதீஷ்குமார், ஆர்.எம்.எஸ். காலனி பெருமாள், ஆசைத்தம்பி, நாகராஜன், ஏர்போர்ட் நாகராஜ், வாழைக்காய் மண்டி சுரேஷ், கார்த்திகேயன். வட்டக் கழக செயலாளர்கள் உறந்தை முத்தையா, சுப்புரா, அரவானூர் பன்னீர்செல்வம், வினோத்குமார் பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் எம்.ஜே.பி. வெஸ்லி, செந்தில்நாதன், சந்திரசேகர், ரசாக், உறையூர் சுரேஷ், பாபர் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்