Rock Fort Times
Online News

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்:- ரூ.2000 ஊதிய உயர்வு…!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அந்த வகையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மீதான மானிய கோரிக்கை இன்று(22-04-2025) நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி , துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அதன் ஒரு பகுதியாக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் ரூ.2000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பின் காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்