Rock Fort Times
Online News

அரசாணை, கையெழுத்து என அனைத்தும் இனி தமிழில் தான் இருக்க வேண்டும்…- தமிழ்நாடு அரசு அதிரடி…!

தமிழ்நாடு அரசு சார்பில் வெளிடப்படும் அரசாணைகள், சுற்றறிக்கைகள் இனி தமிழில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அரசுப் பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து துறை செயலாளர்கள், கலெக்டர்களுக்கு தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும்.

*துறை தலைமை அலுவலகங்களில் இருந்து, பிற அலுவலகங்களுக்குசெல்லும் கருத்துரைகளும் தமிழில் இருக்க வேண்டும்.

*பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும்.

*அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில், ”எனக்கு சில தலைவர்கள் தமிழகத்தில் இருந்து கடிதம் எழுதுவது ஆங்கிலத்தில் இருக்கும். கையெழுத்து கூட ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். தமிழ் மொழியில் போடக்கூடாதா என, நான் வியப்பதுண்டு” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்