தமிழகத்தில் பிளஸ் -1, பிளஸ்- 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பொது தேர்வு நடந்து வருகிறது. அதேபோல 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 9 முதல் 21ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெயில் அதிகரித்து வருவதால் தேர்வு அட்டவணையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 7 ம் தேதி முதல் 17ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றன. 18 ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்.,9ம் தேதி முதல் ஏப்.,21ம் தேதி வரை ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று, தமிழக முதல்வரின் உத்தரவின் படியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி ஏப்., 7 முதல் 17ம் தேதி வரை இறுதித்தேர்வுகள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments are closed.