தமிழக முதல்வரின் 72-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் மாபெரும் சிலம்பப் போட்டி
தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க. ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் விழாவானது தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட வழக்கறிஞர்அணி அமைப்பாளர் தினகரன், மற்றும் மாவட்ட தொண்டர்அணி அமைப்பாளர் உதயகுமார் ஆகியோர் தலைமையில் மாபெரும் சிலம்பப்போட்டி நடைபெற்றது. திருச்சி, காந்தி மார்க்கெட் ஈ.பி.ரோடு மதுரம் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். இந்த சிலம்பம் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர் பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாநகர செயலாளரும் மண்டலக்குழு தலைவருமான மு.மதிவாணன், மாவட்டத் துணைச் செயலாளர் அ.த.த.செங்குட்டுவன் ஆகியோர் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் பன்னீர்செல்வன், துணை தலைவர் பாலசுப்பிரமணியன், துணை அமைப்பாளர்கள் கண்ணன், ராஜலிங்கம், ஜெயசித்ரா மற்றும் மாவட்ட தொண்டர் அணி தலைவர் முத்துச்சாமி, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர்கள் தேவராஜன், சதீஷ்குமார் உட்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.