திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதியின்றி பேனர் வைத்ததாக பாஜக மாநகர் மாவட்ட தலைவர் உள்பட 2 பேர் மீது வழக்கு…!
தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக திருச்சியில் நேற்று( மார்ச் 23) இரவு பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தை யொட்டி மன்னார்புரம் பகுதியில் பாஜக சார்பில் பல இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பேனர்கள் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்ததாக திருச்சி கண்டோன்மென்ட் மற்றும் கே.கே.நகர், ஏர்போர்ட் போலீசார் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ஒண்டிமுத்து, உறையூர் மண்டல் தலைவர் ராஜேஷ் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Comments are closed.