திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சார்ஜாவிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் செல்ல இருந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது இரு பயணிகள் தங்களது உடைமைகளில் பல்வேறு நாட்டு கரன்சிகளை மறைத்து எடுத்துச் செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர்ந்து அப்பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளின் மதிப்பு சுமார் ரூ. 38 லட்சம் இருக்கும் என தெரியவந்துள்ளது.
Comments are closed.