Rock Fort Times
Online News

திருச்சியில் பைக் வீலிங்…- 2 வாலிபர்கள் கைது !

திருச்சி, சுப்ரமணியபுரம், காந்தி தெருவைச் சேர்ந்தவர் முத்தலிப் (42). திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் பேப்பர் கடை நடத்தி வருகிறார். இவர் தன் கடை அருகே நடந்து சென்றபோது 2 வாலிபர்கள் வீலிங் செய்தபடி பைக்கை அதிவேகமாக ஓட்டி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இது குறித்து முத்தலிப் அளித்த புகாரின் பேரில், கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து புத்துார், கல்லாங்காட்டைச் சேர்ந்த அஜய் (25) , இ.பி. ரோடு தெற்கு சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த தரனீஸ் (20) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களது பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்