Rock Fort Times
Online News

திருச்சி, செங்குளம் காலனியில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை..!- காதல் தோல்வி காரணமா ? போலீசார் விசாரணை

திருச்சி, கல்லுக்குழி செங்குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார்.இவரது மகன் ரேவந்த் (வயது 19).திருச்சியிலுள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.காலையில் எழுந்ததும் தனது மகன் தூக்கில் தொங்கியதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்த தகவலின் பேரில் கண்டோன்மெண்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காதல் தோல்வியால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்