திருச்சியில் மனதை உருக்கும் துயர சம்பவம்! கணவன்-மனைவிக்கிடையே தகராறு…- விரக்தியில் தீக்குளித்த பெண் பரிதாப பலி..!
திருச்சி,தென்னூர் அண்டா குண்டான் பகுதியை சேர்ந்தவர் சமீமா பானு (வயது 30). இவருடைய முதல் கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து மனோஜ் குமார் என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் சமீமா பானு. இதையெடுத்து, கணவன்,மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2ந் தேதி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த அவர் மண்ணெண்ணயை ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார். இதில் தீக்காயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ( மார்ச்- 7 ) பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ADVERTISEMENT…👇
Comments are closed.