யார் அந்த சார் ? – நீதி கேட்டு ஸ்டிக்கர் பிரச்சாரத்தை துவக்கியது திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக! மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் அணி திரண்ட நிர்வாகிகள்!
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வரும் நிலையில், ‘யார் அந்த சார்’ என்ற, ‘ஸ்டிக்கர்’ பிரசாரத்தை, அ.தி.மு.க., துவக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள சார் யார்? என்பதை கண்டறிய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுதும், ‘யார் அந்த சார்?’ என விளக்கம் கேட்டு, ‘போஸ்டர்’கள் ஒட்டப்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., – ஐ.டி., பிரிவு நிர்வாகிகள், சென்னையில் உள்ள மால்களில், ‘யார் அந்த சார்?’ என்ற பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கடந்த இரண்டு நாட்களாக சட்டசபைக்கு வரும் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், ‘யார் அந்த சார்?’ என்ற ஸ்டிக்கரை தங்கள் சட்டையில் ஒட்டியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க., சார்பில், இருசக்கர வாகனங்கள், கார்களில், ‘யார் அந்த சார்?’ என்ற ஸ்டிக்கர் ஒட்டும் பிரசாரத்தை துவக்கியுள்ளனர். இந்நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் யார் அந்த சார் ?என்ற ஸ்டிக்கர்களை கார்களிலும் பைக்குகளிலும் ஒட்டி நீதிகேட்கும் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் அமைப்புச்செயலாளரும்முன்னாள் எம்.பி யுமான ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா,பத்மநாதன்,இலக்கிய அணி பாலாஜி,எம்ஜிஆர் மன்றம் கலிலுல் ரகுமான்,அமைப்புசாரா ஓட்டுனர் அணி ஞானசேகர்,ஐ.டி பிரிவு வெங்கட் பிரபு,தொழிற்சங்கம் ராஜேந்திரன், பகுதிச் செயலாளர்கள் அன்பழகன், என்.எஸ் பூபதி, சுரேஷ்குப்தா, புத்தூர் ராஜேந்திரன்,எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,ரோஜர் ,ஏர்போர்ட் விஜி ,வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முல்லை சுரேஷ்,முத்து மாரி,சசிகுமார்,கௌசல்யா,வர்த்தகர் அணி டிபன் கடை கார்த்திகேயன்,கிருஷ்ணமூர்த்தி,தர்கா காஜா, நத்தர்ஷா, வாழைக்காய் மண்டி சுரேஷ் ,பாலக்கரை ரவீந்திரன்,சக்திவேல்,உறையூர் சாதிக் அலி, மணிமொழியன், கருமண்டபம் சுரேந்தர்,வெல்ல மண்டி கன்னியப்பன், எம்.ஜே.பி. வெஸ்லி,இளைஞர் அணி டி.ஆர்.சுரேஷ்குமார், பொன். அகிலாண்டம், செல்லப்பன், கண்ணன்,தென்னூர் ஷாஜகான், உடையான்பட்டி செல்வம் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed.