Rock Fort Times
Online News

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலர் அந்தஸ்து அளவில் பதவி உயர்வு…!

2001 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 5 பேருக்கு முதன்மை செயலர் அந்தஸ்து அளவில் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, உமாநாத் ஐஏஎஸ் முதலமைச்சரின் முதன்மைச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிர்லோஷ்குமார் ஐஏஎஸ் தமிழக ஆளுநர் மாளிகை முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 2009 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை (சென்னை) ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டி.என்.வெங்கடேஷ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திர ரத்னு ஐஏஎஸ், தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (டெல்லி) செயல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆர். லால்வெனா ஐஏஎஸ், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக முதன்மை செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் நந்தூரி ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சிறுபான்மை நல ஆணையரான ஆசியா மரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் (சென்னை) ஆணையராக பொன்னையா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.எஸ்.கந்தசாமி தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராகவும், இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்