திருச்சி நீதிமன்ற வளாக துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் நாளை ( டிசம்பர் 26 ) வியாழக்கிழமை காலை 9.45 முதல் 4 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது., திருச்சி நீதிமன்ற வளாக துணை மின் நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக இங்கிருந்து மின் வினியோகம் பெறும் மத்திய பேருந்து நிலையம், அலெக்ஸாண்ட்ரியா சாலை, உழவர் சந்தை, புத்தூர், வில்லியம் சாலை, நீதிமன்ற வளாகம், அரசு மருத்துவமனை, வண்ணாரப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.
Comments are closed.