எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் நாளை 24-ம் தேதி மாலை அணிவித்து மரியாதை- மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் அழைப்பு…!
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர், சத்துணவு திட்டம் தந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37- வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (24-12-2024) காலை 10 மணி அளவில் திருச்சி நீதிமன்ற வளாகம் அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதில், மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள், செயல் வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments are closed.