திருச்சி, ஸ்ரீரங்கம் ஓம் சக்தி கோவில் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீரங்கம் வெள்ளிக்கிழமை சாலையைச் சேர்ந்த சங்கர் (வயது25) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதேபோல, ஸ்ரீரங்கம் புலிமண்டபம் அருகே கஞ்சா விற்ற மங்கம்மா நகரைச் சேர்ந்த குமார் (21) மற்றும் வெள்ளிக்கிழமை சாலையைச் சேர்ந்த மோகன்ராஜ் (21) ஆகிய 3 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் இ.பி. சாலை பூலோகநாதர் கோவில் அருகே கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (25) என்பவரை கோட்டை போலீசார் கைது செய்தனர். திருச்சி பிராட்டியூர் சாலை அருகே கஞ்சா விற்ற ராம்ஜி நகர், கே.கள்ளிக்குடியைச் சேர்ந்த அஷோக் குமார் (65), கருமண்டபம், கோரையாற்றுக்கரை அருகே கஞ்சா விற்ற ராம்ஜி நகர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கருணமூர்த்தி (48) என்பவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் ராம்ஜி நகர் மில் காலனியில் கஞ்சா விற்ற ஜெய் (எ) ஜானிகிராமன் என்பவர் மீது எ.புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.