Rock Fort Times
Online News

தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு காட்டூரில் உள்ள அவரது சிலைக்கு நாளை 24-ம் தேதி மாலை அணிவித்து மரியாதை- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு…!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தந்தை பெரியார் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி காட்டூர் தஞ்சை ரோட்டில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு நாளை (24-12-2024) காலை 8 மணி அளவில் கிழக்கு மாநகர செயலாளர் மு. மதிவாணன் தலைமையில், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், பி.எம்.சபியுல்லா முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், மாவட்ட, மாநகர அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கழக தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்