Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே 450 ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்- நிவாரண தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை( வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நகர் பகுதியில் 450 ஏக்கர் விளைநிலங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். இரண்டு நாட்களாக பெய்துவரும் கன மழையின் காரணமாக உப்பாறு மற்றும் பங்குனி வாய்க்கால்களில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள வயல்வெளியில் தண்ணீர் புகுந்து நெல் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்‌. இதுகுறித்து விவசாயி பரமேஸ்வரன் கூறுகையில், நகர் பகுதியை சுற்றி 450 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. துறையூர் பச்சைமலை பகுதியில் நீர்வரத்து அதிகமானதை தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் உப்பாற்றில் வருவதால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. வருடம்தோறும் இதே நிலை நீடித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் வயலுக்கு காப்பீடும் செலுத்தி வருகிறோம். ஆனால், எங்களுக்கு எந்தவித நிவாரண நிதியும் கிடைப்பதில்லை. நீரால் மூழ்கிய வயல் பகுதிகளை வேளாண்மை துறை அதிகாரிகள் பார்வையிட்டு எங்களுக்கு நிவாரணத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையே அப்பகுதி விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்