சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஈ.பி ரோட்டில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தலின்படி,திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மு.மதிவாணன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என் சேகரன், சபியுல்லா, மாநில இலக்கிய அணி புரவலர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருச்சி தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் மூக்கன், பகுதி செயலாளர்கள் நீலமேகம், தர்மராஜ், பாபு, மோகன், முஹம்மது, விஜயகுமார், மணிவேல், சிவக்குமார், வட்டக் கழக செயலாளர் மனோகர் மற்றும் மாவட்ட மாநகரப் பகுதி நிர்வாகிகள் சார்பு அணிகளின் நிர்வாகிகள்,பகுதி, ஒன்றிய, நகர, பேரூர்,கழக செயலாளர்கள், மாவட்ட,மாநகர, தொகுதி அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.