திருச்சி மாவட்டத்தில் 449 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என 172 மையங்களில் 17,895 மாணவர்கள், 17,422 மாணவிகள் என மொத்தம் 35,317 மாணவர்கள் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இன்று நடைபெற்ற தமிழ் பாடத்தில் மாணவர்கள் 848 பேரும், மாணவிகள் 268 பேர் என மொத்தம் 1116 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடதக்கது.
