டாஸ்மாக், மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி திருச்சியில் அமமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம்: மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் உட்பட நிர்வாகிகள் பங்கேற்பு…!
மக்கள் எதிர்ப்பை மீறி திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லிங்க நகரில் செயல்படும் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் தலைமையில் உறையூர் குறத் தெருவில் இன்று (2-12-2024) உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. மாநகர் மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் குமார் வரவேற்றுப் பேசினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் தொட்டியம் ராஜசேகரன், அமைப்புச் செயலாளர் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இந்தப் போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் தன்சிங், லதா, பொதுக்குழு உறுப்பினர்கள் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, வேதராஜன், மாநில அம்மா தொழிற்சங்க துணைச் செயலாளர் டோல்கேட் கதிரவன், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.வி.டி கலைச்செல்வன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ் பிரபு, திருச்சி மாநகர் பகுதி செயலாளர்கள் வேதாத்திரி நகர் பாலு ,கம்ருதீன், உமாபதி,மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் நாகநாதர் சிவகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் பெஸ்ட் பாபு, கதிரவன், ஐடி பிரிவு தருண், சிறுபான்மை பிரிவு நாகூர் மீரான், மகளிர் அணி சாந்தி, நல்லம்மாள், மற்றும் உறையூர் சாமிநாதன், கல்லணை குணா, ரவிச்சந்திரன், ஜெகதீசன், பக்ருதீன், அல்லூர் ராமலிங்கம், கலைமணி பாபு, லோகநாதன், கைலாஷ் ராகவேந்திரா, தில்லைநகர் கருப்பையா, ஜங்ஷன் ரமணி, மார்க்கெட் பாபு, நிர்வாகிகள் ஜான் கென்னடி, கிராப்பட்டி கதிரவன், தேசிய ஜனநாயக கூட்டணி திருச்சி தெற்கு மாவட்ட பாமக செயலாளர் திலீப், தமிழர் தேசிய கட்சி செயலாளர் தளவாய் ராஜேஷ், வள்ளல் மணி, வழக்கறிஞர் கோமதி மங்கை, தரூண் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று மாலை அ.ம.மு.க. கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட செயலார் இன்டர்நெட் ரவி, மாநில செயலாளர் ராஜு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசுகின்றனர்.
Comments are closed.