Rock Fort Times
Online News

திருச்சி பொன்மலைப்பட்டி, கொட்டப்பட்டு பகுதிகளில் நாளை 27-ம் தேதி மின் நிறுத்தம்…!

திருச்சி,  மன்னார்புரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் சுப்பிரமணியபுரம் பகுதிகளில் நாளை (27.11.2024) தவிர்க்க முடியாத அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், கொட்டப்பட்டு, ஜீவாநகர், இந்திரா நகர், வெங்கடேஸ்வரா நகர், மொராய் ஸ் கார்டன் பேஸ் 1, 2, 3, ரன்வே நகர், ரேஸ்கோர்ஸ் ரோடு, பென்சனர் காலனி, போலீஸ் குடியிருப்பு, ஈ.வெ.ரா.கல்லூரி ஆகிய பகுதிகளில் நாளை புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3  மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருச்சி மன்னார்புரம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் எம்.கணேசன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்