விஜய் மாநாட்டுக்கு பிறகு கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ”விஜய் மாநாடு நடத்தி, கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிவித்தப் பிறகுதான், விஜய் உடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கார் பந்தயம் நடத்திய ரூ.4,000 கோடியை வைத்து நல்ல சாலைகளை அமைத்து இருக்கலாம். ஒரே இரவில் கார் பந்தயம் நடத்துவதற்கு அனுமதி பெற முடிகிறது. ஆனால், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி தருவதில் என்ன பிரச்னை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானலும் கட்சி நடத்தலாம். யாருடைய வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது. நடிகராக விஜய் எங்கள் வீட்டுக்கு வந்தார், சினிமா வேறு, அரசியல் வேறு. படத்தில் கேப்டன் வரும் காட்சிகள் சிறப்பாக இருக்கும். நான் கோட் படத்தை கண்டிப்பாக பார்ப்பேன்” என்று கூறினார்.

Comments are closed.