திருச்சி அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் அரியமங்கலம் அம்மா குளம் உய்யகொண்டான் ஆற்றுப் படுகை பகுதியில்ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அங்கு இருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அரியமங்கலத்தைச் சேர்ந்த ராகவேந்திரன், சையது உமர், சத்தியேந்திரன், காட்டூரை சேர்ந்த சூரியகுமார் என்பது தெரியவந்தது. அவர்களிடம் ஏராளமான போதை மாத்திரைகள், ஊசிகள், சலைன் பாட்டில்கள் ஆகியவை இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நான்கு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Comments are closed.