திருச்சி கல்லணை ரோடு, திம்மராய சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீரங்கசாய் பாபா ஆலய மஹா கும்பாபிஷேகம் நாளை( 23-08-2024) வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் 9-30 மணிக்குள் நடக்கிறது. முன்னதாக கடந்த 19ம் தேதி திங்கட்கிழமை காலை காவிரியில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி
நடைபெற்றது. 21-ம் தேதி புதன்கிழமை விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்ய பூஜை, தன பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் மற்றும் ஹோமங்கள், முதல் கால யாகபூஜை போன்றவை நடைபெற்றன. 22- ம் தேதி வியாழக்கிழமை காலை இரண்டாம் கால யாகபூஜை, வேதபாராயணம் உள்ளிட்ட பூஜைகள் மாலை மூன்றாம் கால பூஜைகள் ஆகியவை நடைபெற்றன. நாளை 23ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 8 மணி வரை நான்காம் கால யாக பூஜைகள், தீபாராதனை, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு ஆகியவை நடக்கின்றன. அதனைத்தொடர்ந்து காலை 8-30 மணிக்கு கோபுர கலசத்திற்கு
மஹா கும்பாபிஷேக மும், காலை 9 மணிக்கு மூலஸ்தான அனைத்து தெய்வங்களுக்கும் மஹா அபிஷேகம், திவ்ய அலங்காரம், அர்ச்சனை, ஆசீர்வாதம்,
மஹா மங்ளார்த்தி ஆகியவையும், காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கசாய் பாபா திருவருட்பிரசாதம் வழங்குதலும், தொடர்ந்து மாபெரும் அன்னதானமும் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு “வேம்பமர்ந்த வெண்ணிலா பாலகன்” எனும் சாய்பாபாவின் வரலாற்று நூல் ஆலயத்தின் சார்பாக வெளியிடப்படுகிறது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை தேசிய விருது பெற்ற ஆர்.காஷ்யப் மகேஷ் குழுவினரின் சாய் பஜன் நிகழ்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சீரடிசாய் பவுண்டேஷன் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Comments are closed.