Rock Fort Times
Online News

வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு 1,050 சிறப்பு பஸ்கள் இயக்கம்…!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து மாதாவை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி முதல் செப்டம்பர் 8ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதேபோல, மாதா திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 1,050 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்துத்
துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரதது கழகத்தின் மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் ஆகிய ஊர்களிலிருந்தும். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலமாக திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி, திண்டுக்கல், மணப்பாறை, ஓரியூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களிலிருந்தும் வேளாங்கண்ணிக்கு 1,050 சிறப்பு பஸ்கள் வருகிற 23-ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 10-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது. www.masc.inomotote official app செயலி மூலம் முன்பதிவு செய்து வேளாங்கண்ணி செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்