Rock Fort Times
Online News

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறக்க வாய்ப்பு:கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து 35,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் நாளை (14.08.2024) காலை 6 மணி முதல் 10,000 கன அடி தண்ணீர திறக்கப்பட உள்ளது.
மேலும், காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்தினை பொறுத்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஆகவே கொள்ளிட கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை கொள்ளிடம் ஆற்றில் ஓட்டிச் செல்லவோ வேண்டாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்