அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை அடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கபட்டதை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். திருச்சி புறநகர் வடக்கு மாவட்டம், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி தலைமையில் பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, பகுதி கழக செயலாளர்கள் டைமண்ட் திருப்பதி, சுந்தர்ராஜன், கழக பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, ஸ்ரீரங்கம் ரவிசங்கர், மற்றும் வட்ட கழக செயலாளர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
