Rock Fort Times
Online News

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி திருச்சி ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு- அன்னதானம்…!

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் இன்று(11-05-2024) சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகர்,மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், ஜோதிவாணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, அவைத் தலைவர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் கேசி. பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, இலக்கிய அணி பாலாஜி, பகுதி செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி , சுரேஷ்குப்தா,ரோஜர் நிர்வாகிகள் ஜாக்குலின், அய்யப்பன், வெல்லமண்டி பெருமாள், கலீலுல் ரகுமான், அப்பாஸ், இலியாஸ், முன்னாள் கவுன்சிலர் இன்ஜினியர் ராஜா, ஜெயக்குமார், அக்பர் அலி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் புங்கனூர் கார்த்திக், சிந்தாமணி ராஜ்மோகன், பொன். அகிலாண்டம், நத்தர்ஷா, ஜான் எட்வர்டு, பொன்ராஜ், கே.பி.ராமநாதன், ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், வக்கீல்கள் கலியமூர்த்தி, விநாயகமூர்த்தி, ஆரி, எடத்தெரு பாபு, சண்முகம்,அப்பாகுட்டி, உடையான்பட்டி செல்வம், குமார், ராஜசேகர்,டைமன் தாமோதரன், ஐடி நாகராஜ், ரமணி லால், ராஜ்மோகன், தர்கா காஜா, டிஆர்.சுரேஷ்குமார், வசந்தம் செல்வமணி, எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார், கிராப்பட்டி கமலஹாசன், முத்துக்குமார், கதிர்வேல், ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்