Rock Fort Times
Online News

மாணவ, மாணவிகளே ரெடியா இருங்க… நாளை பிளஸ்- 2 தேர்வு முடிவு வெளியாகுது…!

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதினர். விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 2-ல் தொடங்கி 13-ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நிறைவு பெற்றது. வெயில் அதிகரிப்பு காரணமாக பிளஸ்-2 தேர்வு முடிவு தேதி தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் பரவியது.

 

ஆனால், மே 6ம் தேதி திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என தமிழக கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திட்டமிட்டபடி நாளை (06-05-2024) பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியாகிறது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவ- மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக அவர்கள் பள்ளிகளில் அளித்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் வழக்கம்போல அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், இணையதளங்களிலும் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்