Rock Fort Times
Online News

மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா..! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

இன்று நடந்த சட்டசபை கூட்டத்தில்ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து ஏராளமானவோர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் அரசியில் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து அதிமுக ஆட்சி காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்தது. இதனையடுத்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2 முறை தமிழக சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதை பல மாதங்களாக கிடப்பில் போட்டுவிட்டு ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறி கடந்த 6-ம் தேதி சட்ட மசோதாவை அரசுக்கு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். ஆன்லைன் சூதாட்டத்தால் இழந்த உயிர்களுக்கு யார் பொறுப்பு; இன்னும் தாமதப்படுத்தினால் சட்டமன்றத்தையும், மாநில மக்களையும் ஆளுநர் அவமதிப்பதாகவே எடுத்துக்கொள்ள முடியும். மனித உயிர்களை பலி வாங்கும் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. எந்த சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும் தான் மாநில மக்களை காப்பது ஒன்றே சட்டத்தின் கடமையாகும். மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு எங்களால் செயல்படமுடியாது. இதை பிரகடனமாக சொல்கிறேன். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை உறுப்பினர்கள் நிறைவேற்றி தரவேண்டும். மசோதாவை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். மசோதா மீது ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏக்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து பேசினார்கள். இதனையடுத்து, ஆன்லைன் தடை சட்ட மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்