Rock Fort Times
Online News

திருச்சி மாநகர பகுதியில் 21ம் தேதி குடிநீர் வினியோகம் ரத்து…

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையத்தில் நாளை (20.02.2024) காலை 9.45 மணிமுதல மாலை 4 மணிவரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மாநகரத்துக்கு உட்பட்ட மரக்கடை, விறகுபேட்டை ஆகிய பகுதிகளில் 21ம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. 22ம் தேதி முதல் வழக்கம்போல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும், திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்