திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு சாலையின் ஓரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் முகம் சிதைந்த நிலையில் கிடந்தது. அவ்வழியாக சென்றவர்கள் இதனைப்பார்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, முகம் சிதைந்த நிலையில் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா என்பன போன்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.