திருச்சி கருமண்டபம் ராம் நகரை சேர்ந்தவர் அயன் ஸ்டிங் பாலா (வயது 55). இவர், திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது வகுப்பில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவனுக்கு டியூஷன் எடுப்பதாக கூறி வீட்டுக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவன் பெற்றோரிடம் தெரிவித்தான். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக திருச்சி கண் டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் அயன் ஸ்டிங் பாலாவை கைது செய்தனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.