திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த கல்லுாாி மாணவி தனியாா் கல்லுாாியில் பிஎஸ்சி படித்து வருகிறாா். இவருக்கும் வேறொரு தனியாா் கல்லுாாியில் டி.எம்.இ மூன்றாம் ஆண்டு பயின்று வரும் கல்லுாாி மாணவியின் பள்ளி பருவ நண்பருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2021 மே மாதம் மாணவியின் தந்தை இறந்ததால் காதலனுடன் நெருக்கம் அதிகமாகியுள்ளது. இதனிடையே அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து தன்னுடைய காதலனிடம் கூறியுள்ளாா். அவர் கர்ப்பம் கலைவதற்கான மாத்திரையை கொடுத்து சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளாமல் இருந்த நிலையில் கல்லுாாி மாணவி தற்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காதலன் குடும்பத்தாரிடம் பலமுறை பேசியும் காதலன் மறுப்பு தெரிவித்ததோடு கருவை கலைக்க கூறியுள்ளார். இதனால் கல்லூரி மாணவி தன்னுடைய காதலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தன்னால் குழந்தையோடு வாழ முடியாது என்பதால் தன்னையும் தன்னுடைய குழந்தையையும் கருணை கொலை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.