Rock Fort Times
Online News

திருச்சியில் எஸ்ஆர்எம்யூ ரெயில்வே தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்…

இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது...

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து 2004 ம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ரெயில்வே துறையை தனியார் மயமாக்குதல் முறையை ரத்து செய்ய வேண்டும். ரெயில் நிலையங்களையும், விரைவு ரெயில்களையும் தனியாருக்கு தாரை வார்க்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ரெயில்வே ஜங்ஷன் டிஆர்எம் அலுவலகம் முன்பு எஸ்ஆர்எம்யு ரெயில்வே தொழிலாளர்கள் சார்பில் உண்ணாவிரதபோராட்டம் இன்று ( 08.01.2024) தொடங்கியது. இந்த உண்ணாவிரதத்திற்கு திருச்சி கோட்ட செயலாளர், துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமை தாங்கினார். உண்ணாவிரதத்தில் எஸ்ஆர்எம்யூ ரெயில்வே தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை 8மணி முதல் நாளை 9ந்தேதி மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் எஸ்ஆர்எம்யு பொதுச்செயலாளர் கண்ணையா சிறப்புரை ஆற்றுகிறார்.

பொது மக்களை மிரட்டி கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி….

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்