Rock Fort Times
Online News

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது ஊழல் வழக்கு தொடர்வது குறித்த கோப்பு: தமிழக ஆளுநர் நிராகரிப்பு…

நீண்ட காலமாக சிறையில் உள்ள 71 கைதிகளை விடுதலை செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர். என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கோப்பு அனுப்பப்பட்டது. இந்த விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரிய கோப்புக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. கோப்புகள் பரிசீலனையில் இருப்பதாக கூறிய ஆளுநர், தற்போது அதனை திருப்பி அனுப்பியுள்ளார். வழக்கு பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக இருப்பதாகவும், விசாரணை அறிக்கை தனித்தனி தாள்களாக இருப்பதாகவும் கூறி திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில், கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு பதிவு செய்வது தொடர்பான கோப்பு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோப்புகளை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், மீண்டும் தமிழக அரசு சார்பில் இந்த கோப்பு ஆளுநருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்