Rock Fort Times
Online News

மாவட்ட ஊராட்சி குழு தலைவரை கண்டித்து அதிமுகவினர் சாலை மறியல்…

அமைச்சர் கே.என் நேரு பேச்சுவார்த்தையின் பேரில் கலைந்து சென்றனர்...

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஆறு மற்றும் குளங்களை தூர்வாரும் குடி மராமத்து பணிக்காக ஒப்பந்தங்களை பெற்ற அதிமுக மாவட்ட பிரதிநிதி ரமேஷ் மற்றும் பாசறை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பணிகளை முடித்து 3 ஆண்டுகளாகியும் அவர்களுக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரன் பணிக்கான பணத்தை ஒதுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு பணியை முடித்தவர்களுக்கெல்லாம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதாக தெரிகிறது. தாங்கள் அதிமுக நிர்வாகிகள் என்ற ஒரே காரணத்திற்காக பணத்தை வழங்காமல் இழுத்தடித்து வருவதாக குற்றம் சாட்டிய அவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்நிலையில் ஊராட்சி குழு தலைவர் தர்மன் ராஜேந்திரனை கண்டித்து முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் மற்றும் ஒப்பந்ததாரர் செல்வராஜ் ஆகிய இருவரும் ஒன்றிய அலுவலகத்தில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சேலத்திலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த அமைச்சர் கே.என்.நேருவிடம்   நடந்த விவரத்தைக் கூறி முறையிட்டனர். இதுகுறித்து நாளை மாவட்ட ஆட்சித் தலைவருடன் பேசி தீர்வு காணப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்