Rock Fort Times
Online News

பள்ளி அருகே போலி மது விற்ற தேமுதிக நிர்வாகி கைது…

திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் உப்பிலியபுரம் பகுதிகளில் கள்ள சாராயம் மற்றும் போலி மது விற்கப்படுவதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாா் ஐபிஎஸிற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அவரது உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் சமீபத்தில் உப்பிலியபுரம் தங்க நகர், பச்சைமலை ஆகிய பகுதிகளில் அதிரடி வேட்டை நடத்தினர். அப்போது முதியவர் ஒருவர் வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்பட்டது தெரிய வந்தது. போலீசாரை கண்டதும் அந்த முதியவர் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அந்த கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். இந்நிலையில், உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் போலி மது விற்ற கருணாகரன் என்பவரை உப்பிலியபுரம் போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் நடத்திய சோதனையில் 750 மில்லி லிட்டர் அளவு உள்ள 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கருணாகரன், தேமுதிக உப்பிலியபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்