திருச்சி மாவட்டத்தில் தாளக்குடி,நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில், கொண்டையம்பேட்டை ஆகிய பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் அரசு அனுமதித்த டோக்கன்களை விட அதிகமான லாரிகளுக்கு மணல் விற்பனை செய்யப்படுவதாகவும் 10 அடிக்கு மேல் மணல் அள்ளுவதாகும் புகார்கள் எழுந்தது. புகாரைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி கொள்ளிடம் மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் ஸ்டாக் பாயிண்ட்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிஆர்பிஎஃப் வீரர்கள் துணையுடன் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கட்டுக்கட்டாக ஆவணங்கள் மற்றும் 5 கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்களிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கனவே இருமுறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது அமலாக்க துறையைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இரண்டு பேர் என 10 பேர் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவே எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் உதவியுடன் மிதவை படகுடன்
கூடிய ஆழம் கண்டறியும் கருவியுடன் இந்த சோதனையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மூன்றடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும் 15 அடிக்கும் மேல் மணல் அள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.