திருச்சி அரியமங்கலம் மோதிலால் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் கிருத்திகா (வயது 19). இவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மகளிர் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாதமாக கல்லூரிக்கு செல்லவில்லை என்றும் இந்த நிலையில் இன்று ( 03.11.2023 ) காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதியம் வீட்டிற்கு வந்த அவரது தந்தை மகள் கிருத்திகாவை அழைத்துள்ளார். ஆனால் கதவு திறக்காததை தொடர்ந்து ஜன்னல் வழியாக பார்த்த பொழுது அங்கு உள்ள சீலிங் பேனில் துப்பட்டாவால் கிருத்திகா தூக்கில் தொங்கியது தெரியவந்தது. உடனடியாக சேகர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த பொழுது கிருத்திகா ஏற்கனவே இறந்துபோனது தெரிய வந்தது. சேகர் இது குறித்து அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.